ஆம்! உங்கள பாவங்களிலிருந்து உங்களை மீட்டு, உங்களுக்கு ஒரு புது வாழ்வைக் கொடுக்கவே, அண்ட சராசரங்களையும் உண்டாக்கி ஆள்கிற இறைவன் மனித அவதாரம் எடுத்து, ‘இயேசு கிறிஸ்து!‘ என்கிற பெயரில் இந்த உலகில் தோன்றினார். ஜனங்களுக்கு நன்மைகளையும், அற்புதங்களையும் செய்து வந்த அவர், நாம் செய்த நமது பாவங்களுக்காக வாரினால் அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்.
மூன்றாவது நாள் உயிரோடெழுந்து, என்றென்றும் ஜீவனோடு இருக்கிற நித்திய தேவனாக இருக்கிறார். அவருடைய பரிசுத்த இரத்தம் நம்முடைய சகல பாவ, சாப கர்மங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், நமது மரணத்துக்குப் பிறகு அவர் நமக்காக வைத்திருக்கிற சொர்க்க வாழ்விற்கும் நம்மை பங்குள்ளவர்களாக்கி விடுகிறது!